Friday, December 3, 2010

மௌனத்தின் மொழி

புரிந்துகொண்டேன் புரிந்துகொண்டேன்
உன் மௌனத்தின் மொழியதனை ..

இரவின் கருமை எல்லாம்
உன் நினைவால் வண்ணமாகி தான் போகிறது..

உன் நினைவு தீயை தொடும்போது
விட்டில்பூச்சி சிறகின்றி துடிக்கும்
வேதனை எனக்குள்..


சொல்லாமல் வரும்
மரணமும்
காரணம் இல்லாமல் சாகடிக்கும்
காதலும்
ஒட்டி பிறந்த இரட்டையர்கள் போலும்..!?

இரண்டிலும் இதயத்தின்
துடிப்பு
நின்று விடுவதேன்னவோ உறுதி...

மீள முடியாத வேதனை சுமந்து
மறக்க முடியாத பாதைகள் கடந்து
மனம் கனமாய் போகிறது உன்னிடம் மௌனம் கற்று..

சொல்லிவிடு இறந்து விடுகிறேன்;
உன் சொல்லில்லாமல் இறப்பதை விட
சுலபமாக..

மௌனம் மட்டுமே வார்த்தை ஆனால்
புல்லாங்குழல் கூட துளைகளில்
கண்ணீர் சிந்தும் ....

"என் இதயத்தின் இன்னல் கண்டு" .....!!


Monday, November 15, 2010

விளையாத விதைகள்

நிழலாக விழுந்தாளே கண்ணில்
விழுந்ததும் கவர்ந்தாளே
நெஞ்சை !

நினைவாக படர்ந்தாளே
என் எண்ணத்தில் நிலவாக வளர்ந்தாளே !!

உயிரினிலே கலந்தாளே
உதிரத்தில்
தேனாகி இனித்தாளே !!

சுவாசமாக நிறைந்தாளே ,

சிந்தையில்
உதித்தாளே !!
சிலாகித்து சிரித்தேனே !

விதையாக பதிந்தாளே

விதியே இனி இருட்டாகி போனதுவோ
அந்நாள் முதல் !?

காரணம் ; காதலென நினைத்த கணம்
கானலாகி போனாளே

மறைந்தாளே ; மறந்தாளோ ; மரித்தேனே..,
மண்ணோடு மழையாக விளையாத விதை போலே !!??

(கானல் நீர் மட்டுமே பார்த்த சில காதல் விதைகளுள் ஒன்றாக~இராஜசேகர் )


Tuesday, October 26, 2010

அனந்த தீபாவளி



சிறு வயதில்

விழி வைத்து காத்திருப்போம் நாட்காட்டியில் .,
இவ்வழகிய ஒளி திருநாள் காண..!!

தற்போது வாலிபம் பூத்தாலும்
எப்போதும் மறையாத இனிய கனவுகள் சட்டென்று

மின்னிடுமே மத்தப்பூவாக ...!!

தொலைத்த மகிழ்ச்சியை தேட நேரமில்லை

எதிர்கொள்ளும் இன்பத்தை இனிதே வரவேற்ப்போம்..!!

பட்டாசுகளுடன்

சிதறட்டும் கவலைகளும்,துன்பங்களும்...!!

மத்தாப்பூ போல் சிரிக்கட்டும்
உதடுகளுடன் உள்ளமும்,
சிறக்கட்டும் எதிர்காலமும்...!!

இனிப்புகளுடன் மட்டுமல்ல இனிய"நட்புகளுடன்" கொண்டாடுவோம்..!!
அனந்த
தீபாவளி வாழ்த்துக்களுடன் ~ராஜஷேகர்~

Thursday, September 16, 2010

சொல்லத்தான் நினைக்கிறேன்






எதிர் பாராமல் நடந்த இனிய சந்திப்புகள்
போகும்போது பார்க்கிறாள்-பார்க்கும் போது சிரிக்கிறாள் ;
சிலிர்க்கிறேன்
அவளுக்கும் ஏன் மேல் ஈர்ப்பு வந்திருக்குமோ ?
எனக்கு வந்து விட்டதே அதனால் ...


ஒருநாளின் தொடுவானம் சிவக்கும் நேரம்
கலைந்து செல்லும் கல்லூரியினர் கூட்டத்திற்குள்...
போர்முனைக்கு செல்லும் வீரனின்
பயம் கலந்த தைரியம் .!
சென்றேன் அவளருகில் ...


பார்வைகள் மோதிக்கொண்டன ..
வார்த்தைகுண்டுகள் வெடிக்காமலே
கலவர பூமியானது முகம்; எங்கும் வியர்வை ரணம்
இதயத்தின் படபடப்பு பலமாக தாக்கியதில்
இருபது விரல்களுக்குள்ளும் படுகாயம்
மூளைக்குள் இருந்து உதவி ராணுவம்:
உடலெங்கும் ஊரடங்கு உத்தரவு...

சொல்லாத காதலின் அனைத்து தருணமும்
இப்படித்தான் ....

காரணம் தெரியாத போராக,
கோரிக்கை இல்லா வன்முறையாக,
கொள்கை இல்லாத கலவரமாக,
காதலால்
மனதிற்குள் தான் எவ்வளவு போராட்டங்கள் ...?!?!?!

சொல்லாமல்
தவிக்கிறேன்


Wednesday, September 1, 2010

கண்களால் மட்டும் காதல் (கைது) செய்தாள் ..!



கண்ட நாள் முதல்...,
மலராது என்றே விதைத்தேன்
பூக்கதேன்று நினைத்தே நீர் இறைத்தேன்.
அன்று தொட்டு
தொடங்கிவிட்டேன் என் இனிய தவத்தை.....
கண்களும் இமைக்க மறுக்கும்
அவள் கனிந்த முகம் காணும் வரம் கிடக்கவே
என் புன்னகைப்பூவை காண ...,

விடியல்கள் பல சென்றதும்
என்னால் அவளுள் கண்டேன் காதலை...

ஆனாலும் தயக்கம் கொண்டாளோ..
கால் விரலால் கவிதை எழுதினாள்
கை விரல்கள் தறியாகி துப்பட்டாவை திரும்பவும் நெய்தன ..


கண்களால் கைது செய்தாள்...


மறுமுறை சொல்கிறேன்
இதயமெனும் சிறையில் அடைத்தது போதும்..
இதழ்களெனும் வாள் கொண்டு இனிய போரை
துவக்கிவிடு
காற்றாக நான் மாறி கவிதை மாரி பொழிந்திடுவேன்
அழகே நீ கன்னத்தில் முத்தமிட்டால்...

சொல்லாமல் சோதிக்கிறாயா ?...
உனக்கென்ன வேதனைகளோ ....!
கண்கள் நின்றும் நில்லாமல் சென்ற பாதங்கள்
மேல் நான் கோபம் கொள்ளவில்லை...

பார்வையில் மட்டும் காதல் கொண்ட பாவை நீ !

மறுபடியும் திரும்பினால்...;

உன் பார்வைக்காக நிலவும்
உன் சிரிப்புக்கு குயிலும்
உன் வரவுக்கு உதிராதிருந்த மலரக்ளும் போல்...
காத்து நிற்கிறேன் நீ வருவாய் என ...!

Friday, June 11, 2010

காதல் பாதை

விரல்கள் கோர்த்த நடை மீண்டும் , வரமாக கிடைத்தது மண்ணில்... தாய்க்குப்பின் தேவதையே உன்னுடன் ...


அலைகளில் விளையாடிய கால்கள் அமைதியாக நனைந்தன உன்னுடன்...

இன்றோடு அஸ்தமனமா? இல்லை நாளையும் விடியல் உண்டு உன்னுடன்...

பிரியப்போகும் நிமிடம் பார்வைக்குபின் கன்னம் நனையப்போகும் தருணம்... பாதைகள் நம்மை பிரிக்கலாம்...

விட்டு விடாதே விரல்களை மட்டுமல்ல; முத்தமிட்டபின் என் இதழ்களையும் தான்...!!!


~RA~

Monday, June 7, 2010

விண்ணை தாண்டி வருவாயா


உன்னை நினைத்ததாலே மேகம்
அறிந்தேன் ....

விண்மீன்
அனைத்திலும் உன் விழிகள் கண்டேன் ...

உன்
சிரிப்பாலே சிந்தை
கலங்கினேன்....

நிலவாக
நீயிருந்தால் உன் ஒளி படவே
நிலமாக
நான் கிடப்பேன்....

உனதன்பு
உண்மை என்றால் நிலவே...,
"விண்ணை தாண்டி வருவாயா" ...?
ப்ரியமுடன்~ரா~

Sunday, February 14, 2010

நம்மிடம் அன்பு காட்டும் அத்தனை இதயங்களையும் நாமும் அன்பால் காதல் செய்வோம்......!!!
என் அன்னை முதல் என் கால்கள் பூமிதொட்ட நாள் முதல் இன்று வரை என்னிடம் அன்புக்காட்டிய அனைத்து இதயம்களுக்கும் என் மனமார்ந்த காதலர் திருநாள் வாழ்த்துக்கள்....!!

காதலுடன் ~கவிப்பிரியன்~

Sunday, January 10, 2010

தந்தையின் தவிப்பு


மகனே
உன்னை தண்டிப்பது என் நோக்கமல்ல..
நீ தடம் பிரள கூடாதே என்பதே என் ஏக்கம் !!


உன்னை கண்டிக்கும் ஒவ்வொரு கணமும் ...
உள்ளுக்குள் கலங்கும் என் மனம் !!

கட்டளைகள் தான் நான் இட்டவை..
கடிவாளங்கள் அல்ல !!

சற்று கடினமானவை தான் நான் சொன்ன சொற்கள் ...
சாட்டைகள் அல்ல !!

தவிப்புகள் தெரியாமல் வளர்த்துவிட்டேன் ..
விடுதலை கொடுத்து விழுந்துவிட்டேன் !!


எடுத்துக்காட்டியதை ஏளனம் செய்தாய் ..
சுட்டிக்காட்டியதை குறைகள் சொல்கிறேன் என்றாய் !!

உன்னை பற்றி
விருப்பங்களை சொல்ல வந்தேன் ..
வெறுப்புகளை பரிசாய் தந்தாய் !!

அன்பை பரிமாற எனக்கு
தெரியவில்லையா..
அல்லது உனக்கு அதன் அருமை புரியவில்லையா ?

நீ கேட்டதை மறுத்திருக்கிறேன்..
அதை விட சிறப்பானதை உனக்கு தர வேண்டி !!

உன் கோபத்தை ரசித்திருக்கிறேன் ...
என்னை பிரதிபலிக்கிறாய் என்று !!

உன் அழுகையின் காரணம் தாய் அறிவாள்
உன் மௌனத்தின் காரணம் நான் அறிவேன் !!

ஆசைகளை துறந்து விட்டேன் ..
உன் எதிர்காலம் நிராசை ஆகிவிடகூடதே என்று !!

கோபங்களை விட்டாயா? என எண்ணுகிறாய்
நீ கோபம் என எண்ணுவது
அது ஒரு தந்தையின் தவிப்பு நிறைந்த ஆதங்கம்
என்பது நீ தந்தை பதவி ஏற்கும் தருணத்தில் அறிவாய்...!!

வேதனைகளை உன் முன் வைத்துவிட்டேன் ..
வேண்டியதை எடுத்துக்கொள் !!

நன்மைகள் தான் சொன்னேன்..
நண்பர்கள் போல் பழகிட ஆசை கொண்டு !!

மரண வாயில் தொடும் வரை ஒரு ஆசை
உன் மகிழ்முகம் கண்டுகொள்ளவே !!

~ ப்ரியமுடன் ~
தோழமை வேண்டும் தந்தை
~~~~~~~~~~~~

Tuesday, January 5, 2010

காதலியின் ஏக்கம்











உன் மனதோடு சாயும் நேரம் போதும்
மலர் மஞ்சங்கள் தேவையில்லை
உன் விரல்களோடு தேயும் விநாடிகள் போதும்
விடுதலை தேவையில்லை
உன் நினைவோடு காயும் இரவுகள் போதும்
நித்திரைகள் தேவையில்லை
உன் குரலோடு பாயும் குதூகலம் போதும்
குறைகள் ஒன்றும் இல்லை
உன் பாதங்களோடு நடக்கும் பயணங்கள் போதும்
பாதைகளை தேவையில்லை...!!!

~RA~

Saturday, January 2, 2010


அன்று

இணையாத காதலின் தீபம்...,

இன்று

அணையாத “காதல்" ஜோதியாக...!

என்றென்றும்

"தாஜ்மகால்"

~RA~