Friday, June 11, 2010

காதல் பாதை

விரல்கள் கோர்த்த நடை மீண்டும் , வரமாக கிடைத்தது மண்ணில்... தாய்க்குப்பின் தேவதையே உன்னுடன் ...


அலைகளில் விளையாடிய கால்கள் அமைதியாக நனைந்தன உன்னுடன்...

இன்றோடு அஸ்தமனமா? இல்லை நாளையும் விடியல் உண்டு உன்னுடன்...

பிரியப்போகும் நிமிடம் பார்வைக்குபின் கன்னம் நனையப்போகும் தருணம்... பாதைகள் நம்மை பிரிக்கலாம்...

விட்டு விடாதே விரல்களை மட்டுமல்ல; முத்தமிட்டபின் என் இதழ்களையும் தான்...!!!


~RA~

Monday, June 7, 2010

விண்ணை தாண்டி வருவாயா


உன்னை நினைத்ததாலே மேகம்
அறிந்தேன் ....

விண்மீன்
அனைத்திலும் உன் விழிகள் கண்டேன் ...

உன்
சிரிப்பாலே சிந்தை
கலங்கினேன்....

நிலவாக
நீயிருந்தால் உன் ஒளி படவே
நிலமாக
நான் கிடப்பேன்....

உனதன்பு
உண்மை என்றால் நிலவே...,
"விண்ணை தாண்டி வருவாயா" ...?
ப்ரியமுடன்~ரா~