Wednesday, September 1, 2010

கண்களால் மட்டும் காதல் (கைது) செய்தாள் ..!



கண்ட நாள் முதல்...,
மலராது என்றே விதைத்தேன்
பூக்கதேன்று நினைத்தே நீர் இறைத்தேன்.
அன்று தொட்டு
தொடங்கிவிட்டேன் என் இனிய தவத்தை.....
கண்களும் இமைக்க மறுக்கும்
அவள் கனிந்த முகம் காணும் வரம் கிடக்கவே
என் புன்னகைப்பூவை காண ...,

விடியல்கள் பல சென்றதும்
என்னால் அவளுள் கண்டேன் காதலை...

ஆனாலும் தயக்கம் கொண்டாளோ..
கால் விரலால் கவிதை எழுதினாள்
கை விரல்கள் தறியாகி துப்பட்டாவை திரும்பவும் நெய்தன ..


கண்களால் கைது செய்தாள்...


மறுமுறை சொல்கிறேன்
இதயமெனும் சிறையில் அடைத்தது போதும்..
இதழ்களெனும் வாள் கொண்டு இனிய போரை
துவக்கிவிடு
காற்றாக நான் மாறி கவிதை மாரி பொழிந்திடுவேன்
அழகே நீ கன்னத்தில் முத்தமிட்டால்...

சொல்லாமல் சோதிக்கிறாயா ?...
உனக்கென்ன வேதனைகளோ ....!
கண்கள் நின்றும் நில்லாமல் சென்ற பாதங்கள்
மேல் நான் கோபம் கொள்ளவில்லை...

பார்வையில் மட்டும் காதல் கொண்ட பாவை நீ !

மறுபடியும் திரும்பினால்...;

உன் பார்வைக்காக நிலவும்
உன் சிரிப்புக்கு குயிலும்
உன் வரவுக்கு உதிராதிருந்த மலரக்ளும் போல்...
காத்து நிற்கிறேன் நீ வருவாய் என ...!

No comments:

Post a Comment