Thursday, September 16, 2010

சொல்லத்தான் நினைக்கிறேன்






எதிர் பாராமல் நடந்த இனிய சந்திப்புகள்
போகும்போது பார்க்கிறாள்-பார்க்கும் போது சிரிக்கிறாள் ;
சிலிர்க்கிறேன்
அவளுக்கும் ஏன் மேல் ஈர்ப்பு வந்திருக்குமோ ?
எனக்கு வந்து விட்டதே அதனால் ...


ஒருநாளின் தொடுவானம் சிவக்கும் நேரம்
கலைந்து செல்லும் கல்லூரியினர் கூட்டத்திற்குள்...
போர்முனைக்கு செல்லும் வீரனின்
பயம் கலந்த தைரியம் .!
சென்றேன் அவளருகில் ...


பார்வைகள் மோதிக்கொண்டன ..
வார்த்தைகுண்டுகள் வெடிக்காமலே
கலவர பூமியானது முகம்; எங்கும் வியர்வை ரணம்
இதயத்தின் படபடப்பு பலமாக தாக்கியதில்
இருபது விரல்களுக்குள்ளும் படுகாயம்
மூளைக்குள் இருந்து உதவி ராணுவம்:
உடலெங்கும் ஊரடங்கு உத்தரவு...

சொல்லாத காதலின் அனைத்து தருணமும்
இப்படித்தான் ....

காரணம் தெரியாத போராக,
கோரிக்கை இல்லா வன்முறையாக,
கொள்கை இல்லாத கலவரமாக,
காதலால்
மனதிற்குள் தான் எவ்வளவு போராட்டங்கள் ...?!?!?!

சொல்லாமல்
தவிக்கிறேன்


1 comment: