Monday, November 15, 2010

விளையாத விதைகள்

நிழலாக விழுந்தாளே கண்ணில்
விழுந்ததும் கவர்ந்தாளே
நெஞ்சை !

நினைவாக படர்ந்தாளே
என் எண்ணத்தில் நிலவாக வளர்ந்தாளே !!

உயிரினிலே கலந்தாளே
உதிரத்தில்
தேனாகி இனித்தாளே !!

சுவாசமாக நிறைந்தாளே ,

சிந்தையில்
உதித்தாளே !!
சிலாகித்து சிரித்தேனே !

விதையாக பதிந்தாளே

விதியே இனி இருட்டாகி போனதுவோ
அந்நாள் முதல் !?

காரணம் ; காதலென நினைத்த கணம்
கானலாகி போனாளே

மறைந்தாளே ; மறந்தாளோ ; மரித்தேனே..,
மண்ணோடு மழையாக விளையாத விதை போலே !!??

(கானல் நீர் மட்டுமே பார்த்த சில காதல் விதைகளுள் ஒன்றாக~இராஜசேகர் )