மௌனத்தின் மொழி

புரிந்துகொண்டேன் புரிந்துகொண்டேன்
உன் மௌனத்தின் மொழியதனை ..
இரவின் கருமை எல்லாம்
உன் நினைவால் வண்ணமாகி தான் போகிறது..
உன் நினைவு தீயை தொடும்போது
விட்டில்பூச்சி சிறகின்றி துடிக்கும்
வேதனை எனக்குள்..
சொல்லாமல் வரும்
மரணமும்
காரணம் இல்லாமல் சாகடிக்கும்
காதலும்
ஒட்டி பிறந்த இரட்டையர்கள் போலும்..!?
இரண்டிலும் இதயத்தின்
துடிப்பு
நின்று விடுவதேன்னவோ உறுதி...
மீள முடியாத வேதனை சுமந்து
மறக்க முடியாத பாதைகள் கடந்து
மனம் கனமாய் போகிறது உன்னிடம் மௌனம் கற்று..
சொல்லிவிடு இறந்து விடுகிறேன்;
உன் சொல்லில்லாமல் இறப்பதை விட
சுலபமாக..
மௌனம் மட்டுமே வார்த்தை ஆனால்
புல்லாங்குழல் கூட துளைகளில்
கண்ணீர் சிந்தும் ....
"என் இதயத்தின் இன்னல் கண்டு" .....!!

உன் மௌனத்தின் மொழியதனை ..
இரவின் கருமை எல்லாம்
உன் நினைவால் வண்ணமாகி தான் போகிறது..
உன் நினைவு தீயை தொடும்போது
விட்டில்பூச்சி சிறகின்றி துடிக்கும்
வேதனை எனக்குள்..
சொல்லாமல் வரும்
மரணமும்
காரணம் இல்லாமல் சாகடிக்கும்
காதலும்
ஒட்டி பிறந்த இரட்டையர்கள் போலும்..!?
இரண்டிலும் இதயத்தின்
துடிப்பு
நின்று விடுவதேன்னவோ உறுதி...
மீள முடியாத வேதனை சுமந்து
மறக்க முடியாத பாதைகள் கடந்து
மனம் கனமாய் போகிறது உன்னிடம் மௌனம் கற்று..
சொல்லிவிடு இறந்து விடுகிறேன்;
உன் சொல்லில்லாமல் இறப்பதை விட
சுலபமாக..
மௌனம் மட்டுமே வார்த்தை ஆனால்
புல்லாங்குழல் கூட துளைகளில்
கண்ணீர் சிந்தும் ....
"என் இதயத்தின் இன்னல் கண்டு" .....!!
