Wednesday, February 2, 2011

நட்புக்கு மரணமில்லை

மனிதமே உனக்குள் இருந்து பேசுகிறேன்

நீ வயதானாலும்
என்றும் மாறாத இளமையாக நான்..,

கல்லை கூட ஆராய்ச்சி கொண்டு கணித்துவிட்டான் வயதை.,
கலியுகம் முடிந்தாலும் காணக்கூடுமோ என் விதையை.,

புவிமுழுக்க ஆட்சி செய்யுது என் விழுதுகள்
நான்நின்றி விடியுமோ முடியுமோ முப்பொழுதுகள் .,

நிதம் நூறாயிரம் பிணையுது என் கொடிகள் .,
என் பிறப்பிற்கு போதுமே சில நொடிகள்

உணர்சிகளுக்கு உயிர் தந்து
உணர்வுகளுக்கு உருவம் கொடுத்து
உறவுக்குள் பிறக்காத உறவாக
ஆக்சிஜன் ஆதாரம் தேடாத
அன்பெனும் அணு கொண்டு
ஹார்மோன்கள் தேவை படாத கருவானேன்
இதயமென்னும் இன்ப சோலையொன்று போதும் நான் உருவாக...
நட்பென்ற பெயர் கொண்ட சிசுவாக..

இனியும் சொல்லவேண்டுமோ என் அவசியம்.,
நான் ரகசியமில்லா அதிசயம்.

பூமிபந்து எனை புழங்காத நாளேது !?
எவர் பால் காணினும் நானே,
கணக்கற்ற உயிர்களுக்குள்ளும் நானே ..,

பாசங்கொண்ட மனங்கள் போதும்
என்னால் நண்பர்களெனும் உறவுக்குள் கைகோர்க்க..,

உலகில் அன்பெனும் நீரூற்று வற்றாதவரை
நட்பெனும் பூச்செடி எனக்கு மரணமில்லை ....!!!!

ப்ரியமுடன்~ராஜஷேகர்~


1 comment: