Tuesday, February 1, 2011

அவர்களிடமும் சுதந்திர தாகம்



வையகத்தில் உருவெடுத்தோம் மாபெரும் மந்தைக்குள்ளே
மண்ணில் பிறப்பெடுத்தோம் மானிடர் ஜாதியாக .,

கல்லிலே கதைகள் வடித்த வரலாற்று கண்ணீரை சொல்லிலே
துடைக்க வந்தேன் கவியோன்றில் கூற்று வைத்தே ..,

மந்தைகளே மந்தயினை மேய்க்குமே
ஏய்க்கும் மானிடர் சந்தையிலே அவ்விந்தையத்தை காணலாம் ..,

குருதி கொடுத்த அன்னார்கள் விண்ணில்
இன்று பறக்குது
குடிகெடுக்கும் பல கயவர்கள் கொடி இம்மண்ணில்.,

சிந்தை முழுதும் தேசம் சுகப்பட வேண்டுமென்ற
தந்தை உள்ளம் கொண்ட மகாத்மாக்கள் கொஞ்சமென்றால்

அழுக்கு அரசியலால், பொய்யான ஆன்மீகத்தால்
மிரட்டும் தீவிரவாதத்தால், வேரோடிய லஞ்சத்தால் ,
விலையேறிய மனிதாபிமானத்தால்,
விளையாட்டாய் மாறிய வன்முறையால்
நஞ்சாகி போனதுவே என் சகோதர நெஞ்சங்கள் .,

அடக்குமுறை செய்த ஆங்கிலேயன் விரட்டப்பட்டாலும்
அடிமைவிலங்கை ஆனந்தமாக உடைத்தெரிந்தாலும்.,
நிலைத்ததா இன்றுமட்டும் சுதந்திர பாரதம் .,

தஞ்சமென்று வந்தோரை தயவளித்த தாய் மண்ணே
உனக்கு மஞ்சமிட்டு பூ மாலை இட்டு
சுதந்திர மரத்திற்கு உரமாக்கப்பட்ட
உதிரத்தியாகிகள் பலர் இன்று உயிரோடு இருந்திருந்தால்
இன்னும் தீர்ந்திருக்காது நம்போல்

அவர்களிடமும் சுதந்திர தாகம்..!!
( குறிப்பு: 26.1.2011 குடியரசு விழாவுக்காக என் நண்பரின் வேண்டுகோளுக்காக அவருக்கான கவிதை போட்டிக்கு நான் எழுதிய தாக வரிகளிது...!!)
~கவிப்பிரியன் இராஜஷேகர்~

No comments:

Post a Comment